வியாழன், 17 நவம்பர், 2011

மழலை உலகம் மகத்தானது!


இந்த பதிவு தொடர் பதிவு என்பதால் இதனை தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்ட (சகோதரர் விசு) அவர்களுக்கு என் முதல் நன்றியும், வணக்கங்களும்.
இப்பதிவை மேலும் தொடர இருக்கின்ற அன்புச்சகோதரர்கள்
ஆகியோர்களுக்கும் என் நன்றியும்,வாழ்த்துக்களும்!

பெற்றோர்கள் பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க பழகிக்கொள்ள வேண்டும்.நமக்கு தெரியாததையா பிள்ளைகள் சொல்லி விட போகிறார்கள்?என்ற எண்ணமும்,பிள்ளைகள் சொல்லி நாம் கேட்பதா என்ற எண்ணமும் இருந்தால் அவர்கள் மேல் கோபம்தான் வரும்.

பெற்றோர்கள் எப்போதுமே பிரச்சனைகளை பிள்ளைகள் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதில்லை! தங்கள் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள்.அதனால்தான் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிவதில்லை!மாறாக குழந்தைகளின் கண்ணோட்டத்திலிருந்து பிரச்சனையை அணுகி தெளிவான தீர்வினை அவர்களுக்கு அளித்தால் கண்டிப்பாக குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள்.

குழந்தைகள் அன்பான வார்த்தைகளுக்காக ஏங்குகிறார்கள். தன் அப்பா,அம்மா தன்னிடம் கொஞ்சி பேச வேண்டும்.தனுக்கு பிடித்தமானவற்றை வாங்கித்தர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.உதாரணமாக ஆண்குழந்தைகளானால் தொப்பி,கண்ணாடி,கடிகாரம்,மோதிரம்,செயின்,பெல்ட்,ஷூ, விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றையும் பெண் குழந்தைகளானால் பூ,பொட்டு, வளையல், துணி,மணி, ,போன்ற தான் விரும்பும் எதையும் ஆசையுடன் வாங்கித்தர வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள்!பெற்றோர்களால் வாங்கித்தரப்படாத ஒவ்வொரு பொருளும் அவர்களுக்குள் தீராத ஏக்கமாக மாறி ஆழ்மனதுக்குள் புதைக்கப்படுகிறது.

குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் தமக்கு அன்பாகவும்,ஆறுதலாகவும் இருந்து வழி காட்டுவார்கள் என்று நம்புகிறாகள்.நம்பிக்கை உடையும்போது சில குழந்தைகள் பிரச்சனைகளை தானே சமாளிக்க கற்றுக்கொள்கிறார்கள்.சில குழந்தைகள் வேறு நபர்களின் உதவியை நாடத்தொடங்குகிறார்கள்.பிரச்சனை அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.எனவே அவர்களுக்கு எப்போது பிரச்சனையோ அப்போதெல்லாம் பெற்றோரை ஒரு நண்பனாக எண்ணி பிரச்சனைக்கு தீர்வை நாடும்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் நல்ல ஆடை உடுத்த வேண்டும்.நன்றாக அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. அவர்களிடம் இந்த உடையை உடுத்தாதே,இப்படி தலைவாராதே, அப்படி பவுடர் அடிக்காதே என்று படுத்தி எடுத்தால் பெற்றோர்களின் மேல் அவர்களுக்கு எரிச்சல்தான் வரும்.

குழந்தைகள் பெற்றோர் கொடுப்பது சிறிய பொருளாக இருந்தாலும்,பெரிய பொருளாக இருந்தாலும் தன் அப்பா அம்மா தனக்காக எடுத்து வைத்திருந்து கொடுக்கிறார்கள் என்று மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.மாறாக சிறியது,பெரியது,விலை உயர்ந்தது,விலை மட்டமானது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.எனவே அவ்வப்போது பரிசுகளையும்,பாராட்டுக்களையும் கொடுக்க மறக்காதீர்கள்.

குழந்தைகள் வெவ்வேறு வீடுகளுக்கு செல்லும் சமயங்களிலும், வெவ்வேறு விஷேசங்களுக்கு செல்லும் சமயங்களிலும் தன் அம்மாவின் சமையலை அந்த சமையலோடு ஒப்பிட்டு பார்க்கின்றன.ஆனாலும் இந்த சமையல் என் வீட்டில் என் அம்மா செய்து எனக்காக கொடுத்து நான் சாப்பிடுவது போல் ஆகுமா?என்றே நினைக்கின்றனர்.குழந்தைகளுக்கு தன் அம்மாவின் சமையலை மிஞ்ச யாருமில்லை என்ற நினைப்பே மேலோங்கி இருக்கும்.எனவே என் பிள்ளைக்கு இது பிடிக்கும் என்று ஏதாவது ஒரு சின்ன பொருளாவது செய்து கொடுங்கள்.

ஒரு கவிதை:

நாங்கள் ஜாலியாக இருப்பது
உங்களுக்கு சந்தோஷமில்லையா?
அப்படியாயின் உங்கள் பெயர்
பெற்றோர்கள்தானா?

மழலை உலகம் மகத்தானது என்பதில் மாற்று கருதுக்கு இடமில்லை!சகோதரர்கள் இன்னும் சிறப்பாக மழலை உலகத்தை மகிழ்ச்சி உலகமாக மாற்றட்டும்!

Follow This Blog !!!

2 கருத்துகள்:

  1. //பெற்றோர்கள் எப்போதுமே பிரச்சனைகளை பிள்ளைகள் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதில்லை! தங்கள் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள்//

    உண்மை.

    //குழந்தைகள் அன்பான வார்த்தைகளுக்காக ஏங்குகிறார்கள்//

    உண்மை. உண்மை.

    //குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் தமக்கு அன்பாகவும்,ஆறுதலாகவும் இருந்து வழி காட்டுவார்கள் என்று நம்புகிறாகள்.//

    உண்மை. உண்மை. உண்மை.

    இவ்ளோ திறமைய வச்சிக்கிட்டு சும்மா இருக்கீங்க!. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தஙகள் அழைப்பிற்கு நன்றி தோழி..

    நான் முன்பே சென்னைப்பித்தன் ஐயா அழைப்பிற்காக

    மழலை உலகம் என்னும் தலைப்பில்

    எழுதிவிட்டேன்.

    இணைப்பு இதோ..

    http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_3736.html

    தங்கள் அன்பிற்கு நன்றி

    பதிலளிநீக்கு