சனி, 11 ஜூன், 2011

மரம் நடு!



லக்ஷ்மி: வணங்குகிறேன் ஸ்வாமி!

மகாவிஷ்ணு: நலமுடன் இரு தேவி ஏன் இவ்வாறு உன் முகம் வாடியுள்ளது தேவி?

லக்ஷ்மி: நான் நமது மக்களை கண்டு கவலை கொண்டுள்ளேன் ஸ்வாமி!

மகாவிஷ்ணு: அவர்களுக்கு என்னவாயிற்று தேவி?

லக்ஷ்மி: ஸ்வாமி! இப்பொழுதெல்லாம் மக்கள் அமைதியுடனும் நலமுடனும் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை ஸ்வாமி!சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழிவதை கண்டு நான் கவலை கொண்டுள்ளேன் ஸ்வாமி!



மகாவிஷ்ணு: இது மட்டுமின்றி இன்னும் பல அழிவுகளும் ஏற்பட  வாய்ப்புள்ளது, தேவி!

லக்ஷ்மி: ஸ்வாமி! ஏன் மக்களை இவ்வாறு துன்பத்துக்கு  உள்ளாக்குகிறீர்?

மகாவிஷ்ணு: இது என்னால் ஏற்பட்ட துன்பம் இல்லை,  மக்களே தேடிக்கொண்ட துன்பம்,தேவி!

லக்ஷ்மி: என்ன ஸ்வாமி கூறுகிறீர்?

மகாவிஷ்ணு: ஆம், தேவி! இங்கே பார்!இந்த மக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழவே இவ்வாறு பூமியை பசுமையான மரம், செடி, கொடிகளையும், நீர் நிலைகளையும் கொண்டு படைத்திருக்கிறேன்!




மகாவிஷ்ணு: இதை அழிக்க கூடாது என்பதற்காகவே, அவர்கள்
 பலன் பெரும் கையில் உணவாகவும், குடிநீராகவும் அமைத்தேன். எனினும்,இந்த மக்கள் அதை இவ்வாறு அழித்துக் கொண்டிருக் கின்றனர்.
                               
                              




லக்ஷ்மி: அதற்காக இது அதிகபட்ச தண்டனையாய் தெரிகிறது, சுவாமி! இதை தங்களால் தடுக்கவியலாதா?

மகாவிஷ்ணு: இல்லை, தேவி! அவர்கள் செய்த பாவச்செயல்களுக்கான பலன்களை அனுபவிக்க வேண்டியது நியதியாகும்.

லக்ஷ்மி: இதிலிருந்து மக்களை காப்பாற்ற ஏதும் வழி உள்ளதா? சுவாமி!

மகாவிஷ்ணு: ஒரு வழி உள்ளது, தேவி! மேலும் நீர்நிலைகளை அசுத்தம் செய்யாமலும்,மரங்களை அழிக்காமலும்,  புதிய மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாகவும் இந்த இயற்கையின் சீற்றங்களை சற்றே குறைக்கலாம்.         

லக்ஷ்மி: நல்லது சுவாமி! நான் இப்போதே பூவுலகில் ஒரு  ஆசிரியையாக அவதரித்து மாணவர்கள் மூலம் இச்செயலை செய்ய எனக்கு அனுமதி தாருங்கள், ஸ்வாமி!


மகாவிஷ்ணு: நில்! தேவி! இது மாணவர்கள் மட்டும் அல்ல, குழந்தை முதல் பெரியவர் வரை உணர வேண்டும்.


மகாவிஷ்ணு: எனவே, நானும் இப்பூவுலகில் அவதரித்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்து மக்களிடையே இதுப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்படுத்தப் போகிறேன். வா! செல்வோம்!


















Follow This Blog !!!

செவ்வாய், 7 ஜூன், 2011

என்னுயிர் காதலியே!



கண்மை
ஆர்வம் கொண்டிருக்கிறது, 
உன் கண்களை 
தொட்டுப் பார்க்க!

செந்தூரம் 
மேலும் சிவந்திருக்கிறது,
உன் நெற்றியை 
தொட்டுப் பார்க்க!

காதணிகள் 
காத்துக் கொண்டிருக்கிறது,
உன் காதுகளை 
தொட்டுப் பார்க்க!

முத்து மாலை 
தேய்ந்துக் கொண்டிருக்கிறது,
உன் கழுத்தில் 
தவழ்வதற்காக!

 வளையல்கள் 
ஏங்கி கிடக்கின்றது,
உன் கைககளை 
தீண்டிப்  பார்க்க! 

பூவை மட்டும் 
அணிந்திருக்கிறாயே?

என் ஒரு நாள் வாழ்வில் 
உன்னை அலங்கரித்து 
பிறவிப் பலன் அடைய வேண்டும் 
என கெஞ்சியதோ?

பூ உன்னை 
அலங்கரிக்கிறதா?
நீ பூவை 
அலங்கரிக்கிறாயா?

பூவினால் 
நீ அழகா? 
உன்னால் 
பூ அழகா?

உலகில் அனைத்தும் 
உன்னை விரும்ப, 
உன் மனமோ 
என்னை விரும்ப,

என்ன தவம் செய்தேனோ?
என்னுயிர் காதலியே!




Follow This Blog !!!

சனி, 4 ஜூன், 2011

முதல் இரவு!

தலையணைகளின்
துணை 
தேவைப்பட்டது!

செல்பேசியின்
அழைப்பு மணியை 
மட்டுமே காதுகள்
எதிர்பார்த்து கொண்டிருந்தன!

காரணம் இன்றி உதடுகள்
சிரித்து கொண்டேயிருந்தன!

தூக்கத்தை
கண்கள்
மறந்து போயின!

இமைகள் 
மூடுவதற்கு 
மறுத்தன!

ஒளியும்
ஒலியும்
தேவையற்றதாய்
தெரிந்தன!

நான் உணராதவற்றை
முதன் முதலாய்
உணர்ந்தேன்!

கண்ணாளனே
நீ என்னுடன்
இல்லாத 
முதல் இரவு!





Follow This Blog !!!