சனி, 4 ஜூன், 2011

முதல் இரவு!

தலையணைகளின்
துணை 
தேவைப்பட்டது!

செல்பேசியின்
அழைப்பு மணியை 
மட்டுமே காதுகள்
எதிர்பார்த்து கொண்டிருந்தன!

காரணம் இன்றி உதடுகள்
சிரித்து கொண்டேயிருந்தன!

தூக்கத்தை
கண்கள்
மறந்து போயின!

இமைகள் 
மூடுவதற்கு 
மறுத்தன!

ஒளியும்
ஒலியும்
தேவையற்றதாய்
தெரிந்தன!

நான் உணராதவற்றை
முதன் முதலாய்
உணர்ந்தேன்!

கண்ணாளனே
நீ என்னுடன்
இல்லாத 
முதல் இரவு!





Follow This Blog !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக