செவ்வாய், 7 ஜூன், 2011

என்னுயிர் காதலியே!



கண்மை
ஆர்வம் கொண்டிருக்கிறது, 
உன் கண்களை 
தொட்டுப் பார்க்க!

செந்தூரம் 
மேலும் சிவந்திருக்கிறது,
உன் நெற்றியை 
தொட்டுப் பார்க்க!

காதணிகள் 
காத்துக் கொண்டிருக்கிறது,
உன் காதுகளை 
தொட்டுப் பார்க்க!

முத்து மாலை 
தேய்ந்துக் கொண்டிருக்கிறது,
உன் கழுத்தில் 
தவழ்வதற்காக!

 வளையல்கள் 
ஏங்கி கிடக்கின்றது,
உன் கைககளை 
தீண்டிப்  பார்க்க! 

பூவை மட்டும் 
அணிந்திருக்கிறாயே?

என் ஒரு நாள் வாழ்வில் 
உன்னை அலங்கரித்து 
பிறவிப் பலன் அடைய வேண்டும் 
என கெஞ்சியதோ?

பூ உன்னை 
அலங்கரிக்கிறதா?
நீ பூவை 
அலங்கரிக்கிறாயா?

பூவினால் 
நீ அழகா? 
உன்னால் 
பூ அழகா?

உலகில் அனைத்தும் 
உன்னை விரும்ப, 
உன் மனமோ 
என்னை விரும்ப,

என்ன தவம் செய்தேனோ?
என்னுயிர் காதலியே!




Follow This Blog !!!

1 கருத்து:

  1. என்னவளே
    அழகான பரிசுப்பொருட்கள்
    மேலும் அழகாகிவிடுகின்றன
    உன்னால் தரப்படும்போது!

    ஆனாலும்
    உன் அன்பை போன்ற
    எளிமையான பரிசுக்கு முன்பாக
    எதுவுமே அழகானதில்லை!

    பதிலளிநீக்கு