சனி, 11 ஜூன், 2011

மரம் நடு!



லக்ஷ்மி: வணங்குகிறேன் ஸ்வாமி!

மகாவிஷ்ணு: நலமுடன் இரு தேவி ஏன் இவ்வாறு உன் முகம் வாடியுள்ளது தேவி?

லக்ஷ்மி: நான் நமது மக்களை கண்டு கவலை கொண்டுள்ளேன் ஸ்வாமி!

மகாவிஷ்ணு: அவர்களுக்கு என்னவாயிற்று தேவி?

லக்ஷ்மி: ஸ்வாமி! இப்பொழுதெல்லாம் மக்கள் அமைதியுடனும் நலமுடனும் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை ஸ்வாமி!சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழிவதை கண்டு நான் கவலை கொண்டுள்ளேன் ஸ்வாமி!



மகாவிஷ்ணு: இது மட்டுமின்றி இன்னும் பல அழிவுகளும் ஏற்பட  வாய்ப்புள்ளது, தேவி!

லக்ஷ்மி: ஸ்வாமி! ஏன் மக்களை இவ்வாறு துன்பத்துக்கு  உள்ளாக்குகிறீர்?

மகாவிஷ்ணு: இது என்னால் ஏற்பட்ட துன்பம் இல்லை,  மக்களே தேடிக்கொண்ட துன்பம்,தேவி!

லக்ஷ்மி: என்ன ஸ்வாமி கூறுகிறீர்?

மகாவிஷ்ணு: ஆம், தேவி! இங்கே பார்!இந்த மக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழவே இவ்வாறு பூமியை பசுமையான மரம், செடி, கொடிகளையும், நீர் நிலைகளையும் கொண்டு படைத்திருக்கிறேன்!




மகாவிஷ்ணு: இதை அழிக்க கூடாது என்பதற்காகவே, அவர்கள்
 பலன் பெரும் கையில் உணவாகவும், குடிநீராகவும் அமைத்தேன். எனினும்,இந்த மக்கள் அதை இவ்வாறு அழித்துக் கொண்டிருக் கின்றனர்.
                               
                              




லக்ஷ்மி: அதற்காக இது அதிகபட்ச தண்டனையாய் தெரிகிறது, சுவாமி! இதை தங்களால் தடுக்கவியலாதா?

மகாவிஷ்ணு: இல்லை, தேவி! அவர்கள் செய்த பாவச்செயல்களுக்கான பலன்களை அனுபவிக்க வேண்டியது நியதியாகும்.

லக்ஷ்மி: இதிலிருந்து மக்களை காப்பாற்ற ஏதும் வழி உள்ளதா? சுவாமி!

மகாவிஷ்ணு: ஒரு வழி உள்ளது, தேவி! மேலும் நீர்நிலைகளை அசுத்தம் செய்யாமலும்,மரங்களை அழிக்காமலும்,  புதிய மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாகவும் இந்த இயற்கையின் சீற்றங்களை சற்றே குறைக்கலாம்.         

லக்ஷ்மி: நல்லது சுவாமி! நான் இப்போதே பூவுலகில் ஒரு  ஆசிரியையாக அவதரித்து மாணவர்கள் மூலம் இச்செயலை செய்ய எனக்கு அனுமதி தாருங்கள், ஸ்வாமி!


மகாவிஷ்ணு: நில்! தேவி! இது மாணவர்கள் மட்டும் அல்ல, குழந்தை முதல் பெரியவர் வரை உணர வேண்டும்.


மகாவிஷ்ணு: எனவே, நானும் இப்பூவுலகில் அவதரித்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்து மக்களிடையே இதுப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்படுத்தப் போகிறேன். வா! செல்வோம்!


















Follow This Blog !!!

2 கருத்துகள்:

  1. ...அப்படி பெருமாள் ஏற்படுத்திய இயக்கம் தான் விடியல் விழிப்புணர்வு இயக்கம். (ஆமாம், யாருங்க அதுல லக்ஷ்மி?)

    பதிலளிநீக்கு
  2. என்னவளே
    எப்போது பார்த்தாலும்
    பூச்செடிகளோடுதானா?
    அதற்கு என்னதான் வேண்டுமாம்?

    வெடுக்கென கேட்டாய்
    உன்னால் ஒலி,வலி,கண்ணீர்
    தர முடியும்!
    ஒளி,வளி,தண்ணீர் தர முடியுமா?

    பதிலளிநீக்கு